<?xml version="1.0" encoding="UTF-8"?><?xml-stylesheet href="yrss.xsl" type="text/xsl" media="screen" ?><rss version="2.0"><channel><title>Yahoo! Tamil: Health</title><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/</link><description>Yahoo! Tamil</description><language>ta-in</language><copyright>Copyright (c) 2009 Yahoo! Inc. All rights reserved.</copyright><lastBuildDate>Wed, 25 Nov 2009 11:25:07 GMT</lastBuildDate><item><title>செ‌ன்னை மரு‌த்துவமனை‌யி‌ல் எலும்பு மூட்டு உலோக உள்வைப்பு வங்கி</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/25/1091125053_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/25/1091125053_1.htm</link><description>சென்னை அரசு பொது மரு‌‌த்துவமனை‌யி‌ல் இயங்கி வரும் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சை நிறுவனத்தில் நேற்று எலும்பு மூட்டு உலோக உள்வைப்பு வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியை சுகாதார துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்தார்.</description><pubDate>Wed, 25 Nov 2009 14:25:13 GMT</pubDate></item><item><title>நீர்க்கட்டு குணமாக முரு‌ங்கை வை‌த்‌திய‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/25/1091125024_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/25/1091125024_1.htm</link><description>முரு‌ங்கை ‌கீரையை சா‌ப்‌பிடுவதா‌ல் இரு‌ம்பு ச‌த்து ‌கிடை‌க்கு‌ம். ‌கீரை வகைக‌ளி‌ல் முரு‌ங்கை ‌கீரை ‌ஜீரணமாவ‌து கடின‌ம். எனவே இரவு நேர‌த்‌தி‌ல் முரு‌ங்கை‌க் ‌கீரையை சா‌ப்‌பிட‌க் கூடாது.

முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை தூ‌க்‌கி எ‌றியாம‌ல் அதனை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,கால் அசதி நீங்கும்.

குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும்.  கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும்.  கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.  புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள்.  அது சரியாகிவிடும்.

முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரப் பெருக்கும்.
</description><pubDate>Wed, 25 Nov 2009 11:53:15 GMT</pubDate></item><item><title>ப‌ற்களை முளை‌க்க வை‌க்கலா‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/25/1091125023_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/25/1091125023_1.htm</link><description>‌ஸ்டெ‌ம்செ‌ல் ‌சி‌கி‌ச்சை மூலமாக ப‌ற்களை ‌மீ‌ண்டு‌ம் முளை‌க்க வை‌க்க முடியு‌ம் எ‌ன்று பு‌திய அ‌றி‌விய‌ல் க‌ண்டு‌பிடி‌ப்பு ‌நிரூ‌பி‌த்து‌ள்ளது.

ஒரு எ‌லி‌யி‌ன் மே‌ல்தாடை‌யி‌ல் உ‌ள்ள ப‌ற்களை அக‌ற்‌றி‌வி‌ட்டு ‌ஸ்டெ‌‌ம்செ‌ல் முறை‌யி‌ல் ப‌ற்களை வள‌ர்‌த்தன‌ர்.

5 நா‌ட்களு‌க்கு‌ள் முளை‌க்க‌த் துவ‌‌ங்‌கிய ப‌ல், 5 வார‌த்‌தி‌ல் ஈறுட‌ன் இணை‌ந்து உறு‌தியானது. 7வது வார‌ம் முத‌ல் இய‌ல்பான ப‌ற்களை‌ப் போல பய‌ன்படு‌த்த முடி‌ந்தது.

இ‌தி‌ல் ‌கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க ‌சிற‌ப்ப‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், இய‌ற்கை‌ப் ப‌ற்களை‌ப் போல இவ‌ற்று‌க்கான ர‌த்த ஓ‌ட்ட‌ம் ‌சீராக இரு‌க்‌கிறது. உண‌வை அரை‌த்து‌க் கொடு‌ப்ப‌திலு‌ம் எ‌ந்த ‌வித ‌சிரம‌ங்களு‌ம் இ‌ல்லையா‌ம்.

‌இ‌ந்த முறை‌யி‌ல் ம‌னிதனு‌க்கு ப‌ற்களை வளர வை‌க்க ஒரு ஆ‌ண்டு ஆகு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. இ‌ந்த முறை இ‌னி உலக‌ம் முழுவ‌து‌ம் பரவ வா‌ய்‌ப்பு‌ள்ளது. 

ப‌ல்லு போனா‌ல் சொ‌ல்லு‌ப் போ‌ச்சு எ‌ன்ற பழமொ‌ழியை மா‌ற்‌றி புது‌ப்ப‌ல்லு, புது‌ச் சொ‌ல்லு எ‌ன்று கூறலா‌ம்.</description><pubDate>Wed, 25 Nov 2009 11:51:56 GMT</pubDate></item><item><title>சிறு‌நீரக‌த்தை பாதுகா‌ப்போ‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/24/1091124067_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/24/1091124067_1.htm</link><description>‌‌தினச‌ரி அரை ம‌ணி நேரமாவது ‌விய‌ர்வை வரு‌ம் வகை‌யி‌ல் நட‌‌ப்பது, குறை‌ந்தது 3 ‌லி‌ட்ட‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது, அ‌திக உ‌ப்பை அறவே த‌வி‌ர்‌ப்பது போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் செய‌ல்பட உதவு‌ம்.

வயதானவ‌ர்க‌ள்ல் கூடுத‌ல் ‌புரத‌த்தை த‌வி‌ர்‌த்த‌ல், ச‌ர்‌க்கரை நோ‌ய், உய‌ர் ர‌த்த அழு‌த்த நோயை முறையான ‌சி‌கி‌ச்சை மூல‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளுத‌ல் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்தா‌ல் ‌சிறு‌நீரக‌‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

லேசான கா‌ல் ‌வீ‌க்க‌ம், முக ‌வீ‌க்க‌த்து‌க்கு ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரக நோ‌ய்க‌ள் காரணமாக இரு‌க்கலா‌ம்.

‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை நோ‌ய்‌த் தொ‌ற்றை அல‌ட்‌சிய‌ப் படு‌த்த‌க் கூடாது. ‌சிறு‌நீ‌ர் வரு‌ம் பாதை‌யி‌ல் அடை‌ப்பை‌ப் ஏ‌ற்படு‌த்தவு‌ம், நோ‌ய் தொ‌ற்று மே‌ல் ப‌க்க‌ம் செ‌ன்று ‌சிறு‌நீரக‌‌ங்களை‌ப் பா‌தி‌க்கவு‌ம் செ‌ய்யலா‌ம்.

‌சிறு‌நீரக‌‌த்‌தி‌ல் க‌ல் உ‌ண்டா‌கி அதனை உடை‌த்து வெ‌ளியே‌ற்று‌ம் ‌சி‌கி‌ச்சையை செ‌ய்தாலு‌ம் கூட, ‌மீ‌ண்டு‌ம் க‌ல் உருவாக வா‌ய்‌ப்பு‌ள்ளது.</description><pubDate>Tue, 24 Nov 2009 14:37:54 GMT</pubDate></item><item><title>மூல‌த்‌தி‌ற்கு ஆவாரை மரு‌ந்தாகு‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/24/1091124066_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/24/1091124066_1.htm</link><description>ஆவாரை வேர்ப்படை, விஷ்ணுகிரந்தி இலை இந்த இரண்டையும் எலுமிச்சை அளவு அரைத்து பசும் பாலில் கலந்து 3 நாட்கள் குடிக்க, இரத்தம் கலந்து வருகின்ற வெள்ளை நோய் குணமாகும்.

ஆவாரைக் கொழுந்து, பூ, பட்டை இவற்றுடன் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் அறுகின் வேர் சூரணம் சேர்த்து அரைத்து, அதில் இரு விரல் அளவு எடுத்து அதை பசு நெய்யில் கலந்து 48 நாட்கள் உட்கொண்டுவர உள்மூலம் குணமாகும்.

ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணைவிட்டு வதக்கி ஒற்றடமிட மூலமுளை கருகும். அதனால் கடுப்பும், ஊறலும் தணியும்.

ஆவாரைக் கொழுந்தை அல்லி இலையுடன் சேர்த்து அரைத்து அரிசி கழுவிய நீரில் கலந்து பூசிவர, அக்கி, கொப்புளம் குணமாகும்.

ஆவாரம் பட்டையுடன் சுக்கு சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர, கை,கால் வீக்கம் குணமாகும்.</description><pubDate>Tue, 24 Nov 2009 14:35:09 GMT</pubDate></item><item><title>செயற்கை ரத்த‌ம், தோல் உருவா‌க்க முய‌ற்‌சி‌யி‌ல் இங்கிலாந்து விஞ்ஞானிகள்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/24/1091124025_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/24/1091124025_1.htm</link><description>‌விப‌த்து ம‌ற்று‌ம் ப‌ல்வேறு நோ‌ய்க‌ளினா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்ட ம‌னிதனு‌க்கு ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம் ம‌னித உறு‌ப்‌புகளான தோ‌ல்‌, ர‌த்த‌ம், எலு‌ம்பு ஆ‌கியவ‌ற்‌றை, உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களை‌க் கொ‌ண்டு செயற்கையாக உருவாக்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
</description><pubDate>Tue, 24 Nov 2009 11:26:53 GMT</pubDate></item><item><title>22 பே‌ரி‌ல் ஒருவரு‌க்கு மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் அபாய‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/24/1091124021_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/24/1091124021_1.htm</link><description>இ‌ந்‌திய பெ‌ண்‌க‌ளி‌ல் 22 பே‌ரி‌ல் ஒருவரு‌க்கு மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக இ‌ந்‌திய மரு‌த்துவ ஆரா‌ய்‌ச்‌சி கல‌ந்தா‌ய்வு அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
</description><pubDate>Tue, 24 Nov 2009 11:02:20 GMT</pubDate></item><item><title>கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/23/1091123012_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/23/1091123012_1.htm</link><description>கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.</description><pubDate>Mon, 23 Nov 2009 10:41:07 GMT</pubDate></item><item><title>க‌ண்‌ணீ‌ரே ஒரு ‌கிரு‌மிநா‌சி‌‌னி</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/23/1091123011_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/23/1091123011_1.htm</link><description>பொதுவாக உட‌லி‌ல் காய‌ம் ப‌ட்ட‌க் குழ‌ந்தைக‌ள் அழுவதா‌ல், அவ‌ர்களது கா‌ய‌ம் ‌விரை‌வி‌ல் ஆறு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ல் ந‌ம்‌பு‌வீ‌‌ர்களா?

ஆ‌ம், ‌நி‌ச்சயமாக, அழாத குழ‌ந்தைகளை ‌விட, அழு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் காய‌ம் ‌விரை‌வி‌ல் ஆறுவது அ‌றி‌விய‌ல் உ‌ண்மைதா‌ன். இத‌ற்கு‌க் காரணமாக அமைவது க‌ண்‌ணீ‌ரி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மி நா‌சி‌‌னி.

ம‌‌னித‌‌ர்க‌ளி‌ன் க‌ண்‌‌ணீ‌ரி‌ல் ஒரே ஒரு து‌ளியை எடு‌த்து 6 ஆ‌யிர‌ம் து‌ளி த‌ண்‌ணீருட‌ன் கல‌ந்தா‌ல் கூட அ‌ந்த கல‌ப்பு ‌‌நீ‌ர் நூ‌ற்று‌க்கண‌க்கான நோ‌ய்‌க்‌கிரு‌மிகளை‌க் கொ‌‌ல்லு‌ம் ச‌க்‌தி கொ‌ண்ட ‌கிரு‌மி நா‌சி‌னியாகவே இரு‌க்கு‌ம்.

லைனோச‌ம் எ‌ன்ற ஒரு வகை ரசாயன‌ம் ம‌னித‌‌ர்க‌ளி‌ன் க‌ண்‌ணீ‌ரி‌ல் ஏராளமா‌ய் இரு‌க்‌கிறது. இதுவே ‌கிரு‌மி நா‌சி‌‌னியாக செய‌ல்‌படு‌கிறது.

இ‌னி காய‌ம் ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் அழுதா‌ல் அத‌ற்காக அவ‌ர்களை‌த் ‌தி‌ட்ட‌ வே‌‌ண்டா‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்காக அழ‌ச் சொ‌ல்‌லி க‌ட்டாய‌ப்படு‌த்தா‌தீ‌ர்க‌‌ள்.
‌
‌</description><pubDate>Mon, 23 Nov 2009 10:38:16 GMT</pubDate></item><item><title>மாத்திரைக‌ளா‌ல் ஆரோக்கிய‌த்‌தி‌ற்கு ஆபத்து!</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/23/1091123009_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/23/1091123009_1.htm</link><description>இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு‌க் உடனடியாக ஒரு மா‌த்‌திரையை ‌விழு‌ங்க வே‌ண்டு‌ம். உடனே உட‌ல் உபாதை ‌தீர வே‌ண்டு‌ம் எ‌ன்று கருது‌கி‌ன்றன‌ர்.</description><pubDate>Mon, 23 Nov 2009 10:35:18 GMT</pubDate></item><item><title>சு‌த்தம‌ற்ற கா‌ற்று, குடி‌நீரா‌ல் 8 ல‌‌ட்ச‌ம் பே‌ர் இற‌ப்பு
</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/21/1091121017_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/21/1091121017_1.htm</link><description>இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌ண்டுதோறு‌ம், சு‌த்தம‌ற்ற கா‌ற்று, குடி‌நீரா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு சுமா‌ர் 8 ல‌ட்ச‌ம் பே‌ர் வரை உ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்று எ‌ரிச‌க்‌தி ம‌ற்று‌ம் ஆதாரவள அமை‌ப்‌பி‌ன் (டெ‌ரி) அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.</description><pubDate>Sat, 21 Nov 2009 11:59:18 GMT</pubDate></item><item><title>வாழை‌ப்பழ‌ம் குணமா‌க்கு‌ம் ‌வியா‌திக‌ள்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/20/1091120050_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/20/1091120050_1.htm</link><description>வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது. 
</description><pubDate>Fri, 20 Nov 2009 14:15:52 GMT</pubDate></item><item><title>‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிகளு‌க்கு ‌சில அ‌றிவுரைக‌ள்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/20/1091120032_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/20/1091120032_1.htm</link><description>நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

ஒரு குடும்பத்தினர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அதே பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இன்னொரு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீறி திருமணம் செய்தால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.

நடுத்தர வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. அதையும் மீறி உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால் உடனே மரு‌த்துவரை அணுகுவது நல்லது.

40 வயதை எ‌ட்டிய ‌பிறகு வருட‌த்‌தி‌ற்கு ஒரு முறை தா‌ங்களாகவே மு‌ன் வ‌ந்து சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

ஆரம்பத்திலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், பின்னால் வரக்கூடிய பெரிய பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.</description><pubDate>Fri, 20 Nov 2009 12:40:54 GMT</pubDate></item><item><title>மலட்டுத்தன்மை நீங்க ஆவாரை‌யி‌ன் பய‌ன்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/20/1091120031_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/20/1091120031_1.htm</link><description>‌திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. 

அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.

‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். 

மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.

ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.</description><pubDate>Fri, 20 Nov 2009 12:39:00 GMT</pubDate></item><item><title>மாரடை‌ப்பு ஏ‌ற்பட‌க் காரண‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/18/1091118069_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/18/1091118069_1.htm</link><description>மாரடை‌ப்பா‌ல் மரண‌ம் எ‌ன்று ‌சொ‌ல்‌லி‌க் கே‌ள்‌வி‌ப் ப‌ட்டு‌ள்ளோ‌ம். ஆனா‌ல் இ‌ந்த மாரடை‌‌ப்பு எ‌ன்றா‌ல் எ‌ன்ன எ‌ன்று தெ‌ரியுமா?

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்தம் செ‌ல்வது தடைபட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது.  இதை‌த்தா‌ன் மாரடை‌ப்பு எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். 

ரத்த ஓட்டத் தடை எ‌ன்பது பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. உட‌லி‌ல் அ‌திகமான கொழு‌ப்பு சேரு‌ம் போது ஒருவரு‌க்கு மாரடை‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. 

மாரடை‌‌ப்பு ஏ‌ற்பட மேலு‌ம் பல காரண‌ங்க‌ள் உ‌ள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், அ‌திக உட‌ல் உழை‌ப்‌பி‌ன்‌றி இரு‌ப்பது போ‌ன்றவையு‌ம் மாரடைப்பு ஏற்பட‌க் காரண‌ங்களா‌கி‌ன்றன.

மாரடை‌ப்பு ஏ‌ற்பட மே‌ற்கூ‌றிய காரண‌ங்க‌ள் இரு‌ந்தாலு‌ம், பர‌ம்பரை பர‌ம்பரையாகவு‌ம் இ‌ந்த நோ‌ய் தா‌க்க வா‌ய்‌ப்பு‌ள்ளது. எனவே, நமது மு‌ன்னோ‌ர்களு‌க்கு மாரடை‌ப்பு ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல், நா‌ம் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியது அ‌வ‌சிய‌ம்.</description><pubDate>Wed, 18 Nov 2009 14:38:40 GMT</pubDate></item><item><title>‌‌‌‌பி‌த்த‌ம், வாத‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/18/1091118067_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0911/18/1091118067_1.htm</link><description>ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம். 

ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும்.  இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும். 

பாலில் கலந்து உண்ண வாதம் தீரும்.  வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும்.  அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.

நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும்.  கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும்.  வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும். 

ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.
</description><pubDate>Wed, 18 Nov 2009 14:32:49 GMT</pubDate></item><item><title>கூடுதலாக இருந்த மகாதமணி அக‌ற்ற‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/18/1091118038_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/18/1091118038_1.htm</link><description>‌பிற‌க்கு‌ம் போதே இ‌தய‌த்‌தி‌ல் இரு‌ந்து உடலு‌க்கு ர‌த்த‌த்தை‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் தம‌‌னி குழா‌ய் இர‌ண்டு இரு‌‌ந்ததா‌ல், மூ‌ச்சு ‌விடுவ‌தி‌ல் ‌சிரம‌த்துட‌ன் இரு‌ந்த 10 வயது ‌சிறு‌மி‌க்கு, எழு‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள அரசு குழ‌ந்தைக‌ள் மரு‌த்தவமனை‌யி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கூடுதலாக இரு‌ந்த தம‌னி அக‌‌ற்ற‌ப்ப‌ட்டது.</description><pubDate>Wed, 18 Nov 2009 12:40:51 GMT</pubDate></item><item><title>ஒ‌ட்டி‌ப் ‌பிற‌ந்த குழ‌ந்தைக‌ள் ‌அறுவை மூல‌ம் ‌பி‌ரி‌ப்பு</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/18/1091118026_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/news/0911/18/1091118026_1.htm</link><description>‌பிற‌க்கு‌ம் போதே தலை ஒட்டி பிறந்த வங்காளதேச‌த்தை‌ச் சே‌ர்‌ந்த இர‌ட்டை‌க் குழந்தைகளின் தலைகளை ஆஸ்திரேலிய மரு‌த்துவ‌ர்க‌ள் 27 மணி நேர கடினமான அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக பிரித்து‌ள்ளன‌‌ர். த‌ற்போது குழ‌ந்தைக‌ள் மய‌க்க ‌நிலை‌யி‌ல் இரு‌‌க்‌கி‌ன்றன. 
</description><pubDate>Wed, 18 Nov 2009 12:08:36 GMT</pubDate></item><item><title>சரும‌த்தை தா‌க்கு‌ம் ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/17/1091117057_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/0911/17/1091117057_1.htm</link><description>ம‌னித உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கிய உறு‌ப்பாகவு‌ம், ‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பாகவு‌ம் உ‌ள்ள சரும‌த்தை பாதுகா‌க்க வே‌ண்டியது ‌மிக‌ப்பெ‌ரிய பொறு‌ப்பாகு‌ம். சரும‌த்தை தா‌க்‌கி சொ‌றி, ‌சிர‌ங்கு போ‌ன்றவ‌ற்றை உருவா‌க்கு‌ம் பல ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் உ‌ள்ளன.</description><pubDate>Tue, 17 Nov 2009 14:02:05 GMT</pubDate></item><item><title>குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம்</title><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/17/1091117050_1.htm</guid><link>http://tamil.webdunia.com/miscellaneous/health/healthtips/0911/17/1091117050_1.htm</link><description>‌பிரசவ‌ம் ஆனவுட‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் சதையை‌க் குறை‌க்க எ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் முடியுமோ அ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌ல் உட‌ற்ப‌யி‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தொட‌ர்‌ச்‌சியாக ஆறு மாத‌ம் ப‌யி‌ற்‌சி செ‌ய்தா‌ல் வ‌யி‌ற்று‌ச் சதை குறை‌ந்து‌விடு‌ம். 

அதே‌ப் போல வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ப்‌பிய‌ப் பகு‌தி‌யி‌ல் மெ‌ன்மையான து‌ணியை பெ‌ல்‌ட் போல மடி‌த்து லேசாக இறு‌க்‌கி அ‌ணிவது‌ம், பெ‌ல்‌ட் வா‌ங்‌கி அ‌ணிவது‌ம் ந‌ல்லதுதா‌ன்.

பல மரு‌த்துவமனைக‌ளிலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் சதையை‌க் குறை‌க்க ப‌யி‌ற்‌சிகளை ‌சிற‌ப்பு ‌நிபுண‌ர்களை‌க் கொ‌ண்டு நட‌த்த‌ப்படு‌கிறது. அதை ஏனோ தானோவெ‌ன்று ‌நினை‌க்காம‌ல், தொட‌ர்‌ந்து இ‌ந்த‌ப் ப‌யி‌ற்‌‌சியை செ‌ய்து வ‌ந்தா‌ல் வ‌யிறு பெ‌ரிதாக இரு‌க்‌கிறதே எ‌ன்று ‌நினை‌த்து கவலை‌ப் பட வே‌ண்டா‌ம்

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் க‌ண்டப‌டி சா‌ப்‌பி‌ட்டு உட‌ல் எடையை‌அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வழ‌க்க‌‌த்தையு‌ம் மா‌ற்று‌ங்க‌ள். 
</description><pubDate>Tue, 17 Nov 2009 13:00:54 GMT</pubDate></item></channel></rss>