|
| திருச்செந்தூரின் சிறப்பு |
முருகக்கடவுள் குடிகொண்டிருக்கும் திருச்செந்தூருக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் புராணத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவம்:
உக்கிரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் மதுரையை ஆண்டு வந்தார். ஒருவர் கொடுத்த சாபத்தால் அவரது மகளின் முகம் குதிரை முகமாக மாறிவிட்டது.
எத்தனையோ கோயில்களுக்கு சென்றும் தனது மகளின் முகத்தை உக்கிரபாண்டியனால் சரியாக்க முடியவில்லை. இதனால் மிகவும் விரக்தியடைந்த அவனுக்கு திருச்செந்தூர் கோயில் பற்றி தெரியவந்தது.
உடனடியாக உக்கிரபாண்டியன் தனது மகளுடன் திருச்செந்தூருக்கு சென்றான். அங்குள்ள வெயிலுகந்தம்மன் கோயிலில் தங்கினான். அன்று இரவு, மன்னன் உக்கிரபாண்டியன் முருக கடவுளிடம் தனது மகளின் குறை தீர்க்கும்படி கண்ணீர் மல்க வேண்டினான்.
மறுநாள் காலையில் முருகன் கோயில் எதிரேயுள்ள கடலில் மன்னன் மகள் நீராடினாள். கடலில் மூழ்கி எழுந்ததும், அவளது குதிரை முகம் மாறியது. தேவதை போன்ற அழகான முகம் கிடைத்தது.
இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னன் உக்கிரபாண்டியன், முருகக் கடவுளுக்கு மனமுருகி நன்றி தெரிவித்தான். அதோடு, இந்த சம்பவத்தின் நினைவாக அங்கு செப்பு கொடிமரம் ஒன்றையும் அமைத்தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|