|
| பெளத்தம் கூறும் 'வாயினால் செய்யப்படும் பாவங்கள்' | |
ஐம்புலன்களில் ஒன்றான வாய் மூலம் செய்யப்படும் பாவங்களையும், அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக வலியுறுத்துகிறது, பெளத்தம்.
வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன:
பொய் பேசுதல் : தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல்... இவ்வாறு சுய லாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.
கோள் சொல்லல் : பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதலும் பாவமே.
கடுமையாக பேசுதல் : பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல்.
வீண்பேச்சு : பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயம் அற்ற பேச்சு.
மேற்குறிப்பிட்ட வாயினால் செய்யப்படும் நான்கு பாவங்களையும் செய்தல் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்துகிறது 'பெளத்தம்'.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கண்ணாமூச்சி ஏனடா | | காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூ.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்... |
| |
|
|
|
|
|
|
|