|
| ஐ.பி.எல். கிரிக்கெட் கடினமானது : சேவாக் |
| டர்பன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009 ( 18:58 IST ) | |
சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவதை விட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமாக உள்ளது என்று இந்திய அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்திய பிறகு சேவாக் கூறுகையில் "சர்வதேச கிரிக்கெட்டைக் காட்டிலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அழுத்தம் அதிகமாக உள்ளது" என்றார்.
"ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு தோல்வியடைந்தாலும் அணி உரிமையாளர்களிடம் எங்கு தவறு நடந்தது என்பதை விளக்க வேண்டியுள்ளது. இது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இதனால் அதிக போட்டிகளை வெல்வதே சிறந்தது.ஏனெனில் இது போன்ற கடினமான சந்திப்புகளைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறார் சேவாக்.
அரையிறுதிக்குள் முதலில் நுழைந்த அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியாக இருப்பினும், இந்த முறை புள்ளிகள் அட்டவணையின் படி போட்டி அதிகமாக உள்ளது அதனால் எந்த அணியையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார் சேவாக்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|