|
| வெளிநாடுகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும்: கங்குலி |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 11:52 IST ) | |
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுகளில் வென்று தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் முதலிடம் பற்றி பேச முடியும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி:
இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அணி என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவை வென்றதால் முதலிடத்திற்கு போட்டியிடுவதாகக் கூற முடியாது. சொந்த மண்ணில் வென்றதைப்போல் வெளிநாடுகளிலும் இந்தியா வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா மோசமாக விளையாடி வருகிறது. ஆனாலும் அந்த அணி ஐசிசி தர வரிசையில் முதலிடத்தில் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து சச்சின், டிராவிட் போன்றவர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். எனினும் நம்மிடம் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை.
இவ்வாறு கங்குலி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|