|
| இங்கி. டெஸ்ட்: இந்திய அணி இன்று அறிவிப்பு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 12:26 IST ) | |
இங்கிலாந்து எதிராக விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இன்று அறிவிகப்படுகிறது. இதில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த தொடருடன் அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் இடத்தை நிரப்ப தகுதி வாய்ந்த வீரர்களை சேர்க்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து வரும் யுவராஜ் சிங்கிற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதேபோல், தொடக்க வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே 33 மற்றும் 41 ரன்கள் எடுத்த தமிழக வீரர் எம். விஜய் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை கும்ப்ளேவின் வெற்றிடத்தை நிரப்ப ஹர்பஜன் சிங் இருந்தாலும், மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுவதால் அமீத் மிஸ்ரா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. இதேபோல் முனாப் படேல், ஆர்.பி. சிங் ஆகிய இருவரில் ஒருவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|