|
| இந்திய அணியின் பாக். பயணம் ரத்து |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 11:13 IST ) | |
மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடத் திட்டமிபட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பையில் நடந்த கொடூரத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், அந்த மண்ணில் இந்திய வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்காது என்று கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இரு அணிகளுக்கும் இடையே பொதுவான இடத்தில் போட்டிகள் நடத்தும் சாத்தியக்கூறுகளை பிசிசிஐ மறுக்கவில்லை.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ராஜிவ் சுக்லா கூறுகையில், இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து இதுவரை அரசிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|