யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ் மரணம்
பொகாரோ (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008   ( 12:25 IST )
இந்திய கால்பாந்து வீரர் பீட்டர் தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

கடந்த 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கால்பந்துப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் கோல் கீப்பராக இருந்த பீட்டர் தங்கராஜ், பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்த தங்கராஜ், திங்கட் கிழமையன்று பொகாரோவில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

ஆசியாவின் சிறந்த கோல் கீப்பர் என்ற சிறப்பை பெற்ற பீட்டர் தங்கராஜ், 1954, 1958, 1962, 1966 ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார்.

கடந்த 1968 ஆம் ஆண்டு தங்கராஜுக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் ஆசிய அனைத்து நட்சத்திர கால்பந்து அணியில் இருமுறை இடம்பெற்று சாதனை புரிந்தார்.

1956 ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக், 1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் தங்கராஜ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
5-வது ஒருநாள்: இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்
கட்டாகில் நாளை 5-வது ஒருநாள் போட்டி
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் அபராதம்
பெங்களூரிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா
4வது ஒருநாள் போட்டி: மழையால் தடை
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...