|
| செஸ் ஒலிம்பியாட்:இந்தியா வெற்றி |
| டிரஸ்டென் (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 12:51 IST ) | |
ஜெர்மனில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
ஜெர்மனில் உள்ள டிரஸ்டென் நகரில் உலகின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 32-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணி, தனது 7-வது சுற்றுப் போட்டியில் பல்கேரியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தானியா சச்தேவ், மேரியான் கோம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஹரிகா தனது ஆட்டத்தை டிரா செய்தார்.
இதன் இறுதியில் 2.5 - 1.5 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, மொத்தம் 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தை எட்டியது. இப்பிரில் சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்திய மகளிர் அணி தனது அடுத்த போட்டியில் செர்பியாவை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் இந்திய ஆடவர் அணி பிரான்சிடம் தோல்வியடைந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|