|
| சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 12:12 IST ) | |
சாம்பியன்ஸ் லீக் 20- 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் லீக் 20 - 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கலந்து கொள்கின்றன.
இது தவிர விக்டோரியா, மிடில்செக்ஸ், டால்பின்ஸ், சியால்கோட், ஸ்டாலியன்ஸ், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, டைடான்ஸ் ஆகிய வெளிநாட்டு அணிகளும், இத்தொடரில் பங்கேற்கின்றன.
சாம்பியன்ஸ் லீகில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி தொடர்கிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ ஹைடன், மைகேல் ஹசி, இலங்கையின் முரளிதரன் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் இருப்பார்.
அணி விவரம் வருமாறு: மகேந்திரசிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, எஸ். பத்ரிநாத், அருண் கார்த்திக், பார்த்தீவ் படேல், அஸ்வின், எல்.பாலாஜி, மன்பிரீத் கோனி, எஸ். தியாகி, மேத்யூ ஹைடன், மக்கேல் ஹசி, அல்பி மோர்கெல், கபுகேதரா, முரளிதரன் மற்றும் மகாயா நிட்னி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|