|
| 4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு |
| கான்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 11:37 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று முதல் 3 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 4 போட்டிகளுக்கான இந்திய அணி கான்பூரில் நாளை அறிவிக்கப்படுகிறது. இதற்காக, தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்தி, அணியின் விவரத்தை வெளியிடுகிறது.
தற்போது ஓய்வில் உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இதில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இது தவிர தற்போதுள்ள அணியில் பெரிய அளவில் மாற்றமிருக்காது என்றும் கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|