|
| 5வது ஒருநாள் போட்டி: இலங்கை 8/1 |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008 ( 15:19 IST ) | |
இந்தியாவிற்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6.1வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது.
அடுத்தடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெயசூர்யா 1 ரன்னில் அவுட் ஆனார். தற்போது வார்னபுரா 2 ரன்களுடனும், உடேவாட்டே 5 ரன்களும் எடுத்துள்ளனர்.
6.1வது ஓவரில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜாகீர்கான் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இலங்கை அணியில் வாஸ், முரளிதரன் மற்றும் தில்சன் ஆகியோருக்கு பதிலாக முபாரக், தில்கரா மற்றும் மகிலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|