|
| அர்ஜூனா விருது: குழு தலைவரானார் மில்கா சிங்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), 20 ஜூலை 2008 ( 16:48 IST ) | |
அர்ஜூனா மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் குழுவின் தலைவராக மில்கா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜூனா விருது (2007), இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் மற்றும் ஆயுள் நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தையான்சந்த் விருதுகள் பெறுபவர்களை, மில்கா சிங் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த குழுவைத் தவிர துரோனாச்சாரியார் விருது - 2007 பெறுவோரை தேர்ந்தெடுக்கவும், தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணன் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறுகையில், "சிறந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உருவாக்குவது எனது கடமை. அதை நான் நல்ல முறையில் செய்துள்ளேன். விருதுக்கு தகுதியான வீரர்களை இக்குழுவினர் தேர்வு செய்வர்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|