|
| ஹர்பஜனுக்கு 5 ஒருதின போட்டிகளில் விளையாட தடை |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 16:47 IST ) | |
ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், 5 சர்வதேச ஒருதினப் போட்டிகளில் விளையாட ஹர்பஜனுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்து, மூத்த வழக்கறிஞர் சுதிர் நானாவதி நேற்று தாக்கல் செய்த அறிக்கையை, பிசிசிஐ தலைவர் ஷரத் பவார் தலைமையில் ஷஷாங்க் மனோகர், சிராயு அமின் ஆகிய மூவர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று பரிசீலனை செய்தது.
இதைத் தொடர்ந்து, ஹர்பஜனுக்கு 5 சர்வதேச ஒருதினப் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக, அந்தக் குழு அறிவித்தது. இந்த உத்தரவுக்கான நகல், ஹர்பஜனிடம் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், ஹர்பஜனுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாதது கவனத்துக்குரியது.
முன்னதாக, ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜனுக்கு, இந்தியன் பிரீமியர் லீக்கின் 11 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|