யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
திராவிட், சாருவை நம்பியது பெரும் தவறு : மல்லையா
பெங்களூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 12:39 IST )
இந்தியன் பிரீமியர் லீக் - பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஆட்டக்காரர்கள் தேர்வில், ராகுல் திராவிட்டையும், சாரு ஷர்மாவையும் நம்பியது பெரும் தவறாகிவிட்டது என்று அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 33 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

பெங்களூர் அணியின் கடும் பின்னடைவு குறித்து பெங்களூரில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த மல்லையா, கிரிக்கெட்டில் தனக்கு போதிய அனுபவம் இல்லாததால், அணித் தேர்வில் தலையிடவில்லை என்றும், கேப்டன் ராகுல் திராவிட்டும், தலைமை நிர்வாகி சாரு சர்மாவும்தான் முடிவுகளை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.

திராவிட்டையும், சாருவையும் நம்பியது மாபெரும் தவறாகிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், அணியின் இறுதிப் பட்டியலைப் பார்த்துவிட்டு, 'டெஸ்ட் அணி போன்று உள்ளதே' என்று தனது நண்பர்கள் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அணியை தேர்வு செய்த இருவரின் மீதும் தாம் நம்பிக்கைக் கொண்டிருந்தாகவும் கூறினார்.

மேலும், எஞ்சிய ஆட்டங்களிலாவது திராவிட் வெற்றியை ஈட்டித் தருவார் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில், பெங்களூர் அணியின் நிலை மோசமாகி வந்ததன் எதிரொலியாக, அதன் தலைமை நிர்வாகி சாரு ஷர்மாவுக்குப் பதிலாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.

பெங்களூர் அணியை 111.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து, விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் : இந்திய அணி சாம்பியன்
ஐபிஎல் : ஐதராபாத்தை வென்றது கோல்கத்தா
அஸ்லான் ஷா ஹாக்கி : கனடாவை வீழ்த்தியது இந்தியா
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருது
பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace