|
| செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா : ஆனந்த்
|
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 17:23 IST ) | |
நாட்டில் கிரிக்கெட்டுக்கு மக்களின் ஆதரவு அபரிவிதமாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்ற விஸ்வநாதன் ஆனந்த், செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், "இந்தியாவில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கிரிக்கெட் உள்ளதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேநேரத்தில், செஸ்சை ஜனரஞ்சக விளையாட்டாக உருவாக்க வேண்டும். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருப்பது உண்மை" என்றார்.
"ஒரு விளையாட்டை எப்போதும் பிரபலப்படுத்துவது நல்லதுதான், ஆனால் உதாசினப்படுத்துவதும், தவறாக அணுகுவதும் கூடாது என்றே கருதுகிறேன்' என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
மொத்தம் 17 கிராண்ட் மாஸ்டர்களுடன் செஸ்சில் தனது ஆதிக்கத்தை இந்தியா நிரூபித்துள்ளதாக தெரிவித்த ஆனந்த், "இந்த விளையாட்டை மக்களிடையே மேலும் பிரபலப்படுத்துவதே முக்கியத் தேவையாகும்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|