|
| ஐபிஎல்.லில் சேர ஆஸி. வீரர்களுக்கு இறுதி கெடு |
| மெல்போர்ன் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 பிப்ரவரி 2008 ( 12:50 IST ) | |
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) அமைப்பில் சேர, வரும் ஞாயிற்றுகிழமை வரை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் அமைப்பு சார்பில் வரும் இருபதுக்கு 20 போட்டிகள் ஏப்ரல் 18ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் மாதம் வரை நடைபெறும்.
இதில் மொத்தம் 8 நகரங்களை கொண்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளை பல முக்கிய பிரமுகர்கள் பல கோடிகள் செலவில் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல்.லில் சேர விரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பிரபல வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் லலித் மோடி அளித்துள்ள பேட்டி:
ஐ.பி.எல். அணிகளை வாங்கும் நிறுவனங்களுக்கு, வரும் திங்களன்று வீரர்களின் பட்டியலை கொடுக்க வேண்டும், எனவே வரும் ஞாயிறுக்குள் அணி வீரர்கள் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெறாமலேயே அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|