யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழ‌ர்க‌ள் ‌மீது சிங்கள ராணுவம் தொட‌ர்‌ந்து தாக்குதல்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:29 IST )
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக நாடுகளை ஏமாற்றிக்கொண்டு தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்று இல‌‌ங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டம் அதன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாறன் தலைமையில் சென்னை பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் நே‌ற்று நடந்தது. இதில் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ், ஜி.கே.மணி, ம.த‌ி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

இலங்கையில் சிங்கள ராணுவத்தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.

போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.

போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எ‌ன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜல்லிக்கட்டு நடத்த ரூ.25 லட்சம் காப்பீடு :நீதிபதி அறிவுறுத்த‌ல்
ஈழ தமிழர் பாதுகாப்பு: தமிழகத்தில் எழுச்சி பேரணி
ஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது : திருமாவளவன்
இன்று இரவு தொலைக்காட்சியில் பேசுகிறார் பிரபாகரன்!?
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெ‌ளி‌யீடு: சென்னையில் 92.06 சதவீதம் தேர்ச்சி
புதிய தமிழகம் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் : கிருஷ்ணசாமி
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...