|
| இன்று இரவு தொலைக்காட்சியில் பேசுகிறார் பிரபாகரன்!? |
| சென்னை (ஏஜென்சி ), 20 மே 2009 ( 16:52 IST ) | |
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த சிறிலங்க அரசாங்கம், நேற்று அவரது உடலைக் கைப்பற்றியதாக வீடியோ காட்சி வெளியிட்டது.
இந்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க இருப்பதாகவும் ஒரு குறுஞ்செய்தி இன்று மதியம் முதல் படுவேகமாக செல்போன் உபயோகிப்பாளர்கள் மத்தியில் பரவி வருகிறது.
அந்த குறுஞ்செய்தியில், நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இன்று இரவு 10.30 மணிக்கு அவர் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளிக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|