|
| திருமங்கலம் வாக்குப்பதிவு : நரேஷ் குப்தா திருப்தி |
| மதுரை (ஏஜென்சி), 10 ஜனவரி 2009 ( 12:14 IST ) | |
திருமங்கலம் தொகுதியில் அமைதியான ஓட்டுப்பதிவு நடந்ததாகவும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களித்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திருப்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், பலத்தப் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெறுவதை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேரில் சென்று கண்காணித்தார்.
விறுவிறுப்பான தேர்தல் பணிகளுக்கு இடையே நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குப்பதிவு அமைதியாக, நேர்மையாக, நியாயமாக நடந்து முடிந்தது. ஒரு சில பகுதிகளில் தங்கியிருந்த வெளிநபர்களை காவல்துறை, வருவாய் துறை மற்றும் பறக்கும் படையினர் வெளியேற்றினர்.
தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவாகவில்லை. ரேஷன் கார்டை பயன்படுத்தி வாக்களிப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால் அதை மட்டும் கொண்டு வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஒத்துழைப்புடன் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்களும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|