|
| ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகை |
| சென்னை (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 09:39 IST ) | |
சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகிறார்.
பிற்பகல 12.30 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேரும் குடியரசுத் தலைவருக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
தனது மாலை நிகழ்ச்சியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் 'வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் முனைவோர் மாநாட்டில்' (பிரவாசி பாரதிய திவஸ்) பங்கேற்கு, நிறைவுரையாற்றுகிறார் பிரதிபா பாட்டீல்.குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ஹைதராபாத் செல்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|