|
| வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியா ? : கருணாநிதி விளக்கம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 12:13 IST ) | |
'வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே கோளாறு செய்ய முடிந்தால், தேர்தல் ஆணையம் என்ற அமைப்பே தேவையில்லை' என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
திருமங்கலம் தொகுதி நிலவரம் பற்றி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, 'முன்பு பீகார்- இப்போது தமிழகம்' என்ற அளவுக்கு வருத்தப்பட்டு கூறியுள்ளார்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே கோளாறு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வை.கோ. தா.பாண்டியன் போன்றோர் கற்பனையாக கூறியுள்ளனர்.
இதன் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி 'முன்பு பீகார் - இப்போது தமிழகம்' என்று ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்.
ஜெயலலிதா சொன்னது போல், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு செய்ய முடியுமானால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்றே தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|