|
| பேருந்துகளில் காய்கறி ஏற்ற அனுமதி: நேரு |
| திருச்சி (ஏஜென்சி), 6 ஜனவரி 2009 ( 16:23 IST ) | |
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சமாளிக்க, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காய்கறி - பழங்களை ஏற்றிச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க பேருந்துகளை பயன்படுத்திக் கொள்வதற்கு முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும்படி அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் காய்கறிகளை கொண்டு செல்லும் போது கட்டணம் வசூலிப்பதா, அல்லது அவற்றை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்.
பேருந்துகளில் காய்கறிகளை ஏற்ற மறுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடமும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|