|
| வாக்குப்பதிவு மெஷினில் மோசடி இல்லை: தேர்தல் ஆணையம் |
| புதுடெல்லி/ சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 11:08 IST ) | |
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே இருப்பதால், அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலின்போது போலியான வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா மற்றும் மதிமுக மக்களவை உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், "வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் மூலம் 100 சதவீதம் முழுமையான வாக்குப்பதிவு சாத்தியமாகும். இதில் மோசடி செய்ய முடியாது" என்று விளக்கமளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|