|
| திருமங்கலம்: 5ம் தேதி கருணாநிதி பிரச்சாரம்
|
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 12:01 IST ) | |
திருமங்கலம் தொகுதியில் வரும் 5ம் தேதி முதல்வர் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு குவிந்துள்ளதால், திருமங்கலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதி வரும் 5ம் தேதி திருமங்கலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 6 மணிக்கு திருமங்கலம் தேவர் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து பேசுகிறார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்று, திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|