|
| வெடிகுண்டு மிரட்டல் : கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 18:22 IST ) | |
கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நிற்கும் பகுதியில், இன்று அதிகாலை விமான பயணிகளின் பொருள்களை எடுத்து செல்லும் வண்டியில் 'விமானத்தில் இன்று குண்டு வெடிக்கும்' என்று 'சாக்பீசால்' எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி கோவை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மோப்ப நாயுடன் அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
பயணிகள் உடமைகளை கொண்டு செல்லும் தள்ளுவண்டி உள்பட பல இடங்களில் சோதனை போட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் கோவை பீளமேடு விமான நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|