|
| தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை |
| ராமேஸ்வரம் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 13:00 IST ) | |
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவர்களை கடுமையாக தாக்கியதோடு, அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும், திசை காட்டும் கருவி, குளிர்சாதன பெட்டியையும் இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த தாக்குதலில் தங்கச்சிமடத்தை சேர்ந்த முருகன், ரோலன் ஆகிய இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இலங்கை கடற்படையினரால் கொள்ளையடிக்கப்பட்ட மீன்கள், பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|