|
| அதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு |
| செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 16:39 IST ) | |
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிமுக உறுப்பினர் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த தங்கமுத்து என்பவர்,அதிமுக சார்பில் போட்டியிட்ட குளோரி சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்த இந்த மனு மீதான விசாரணை முடிந்து இந்த வழக்கில் நீதிபதி நாகப்பன் இன்று தீர்ப்பளித்தார்.
குளோரி சந்திரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. கிறிஸ்துவராக மாறி இருப்பதால் அவர் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அனுபவிக்க முடியாது.
எனவே அவர் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனுதாரர் தங்கமுத்துவுக்கு வழக்கு செலவுக்கான தொகை ரூ. 5 ஆயிரத்தை குளோரின் சந்திரா வழங்க வேண்டும் என்று அவர் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|