|
| பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருணாநிதி ஆலோசனை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 16:56 IST ) | |
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி, உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கருணாநிதி கேட்டறிந்தார்.
மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி,மூத்த காவல்துறை அதிகாரிகள் லத்திகா சரண், உளவுத்துறை ஏடிஜிபி ஜாபர் சேட், சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|