|
| வெள்ள நிவாரணம்: ஸ்டாலின் தலைமையில் குழு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 14:02 IST ) | |
வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்துவதற்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைத் துணைக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இக்குழுவில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைக்கவும், ஸ்டாலின் தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவின் முதல் கூட்டம் நாளை (2 ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|