|
| வெள்ள நிவாரணம்: அரசுக்கு நெடுமாறன் கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008 ( 09:59 IST ) | |
அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அமைத்து வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் நெடுமாறன் கூறியதாவது:
தமிழக்த்தில் தற்போது பெய்த மழையால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை- வெள்ளத்தால் இதுவரை இல்லாத அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள ரூ. 100 கோடி போதாது. கூடுதல் நிதியை ஒதுக்க அரசு முன் வர வேண்டும்.
மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளூர் அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அமைத்து நிவாரண உதவிகள் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|