|
| திமுகவுடன் கூட்டணி கிடையாது: பாமக |
| திருச்சி (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008 ( 09:20 IST ) | |
திமுகவுடன் பாமக கூட்டணி வைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று அதன் தலைவர் கோ.க. மணி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடன் பேசிய அவர், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கைது செய்யப்பட்டது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. தற்போது அவர் விடுதலை ஆகியுள்ளதால் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்றார்.
தொடர்ந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாமக செயல்படும் என்று தெரிவித்த மணி, கூட்டணி வேறு, தோழமை வேறு என்றார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டத்தற்கு, இது குறித்து பாமக பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.
முன்னதாக திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று விடுதலையான காடுவெட்டி ஜெ. குருவை கோ.க. மணி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|