|
| திருவாரூர், கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை |
| கடலூர்/ தஞ்சை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 15:39 IST ) | |
மழையின் பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிஷா புயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழகம் படிப்படியாக மீண்டு வருகிறது. சென்னை நகரில் 5 நாட்களுக்குப் பின் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது.
ஆனால், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னமும் மழை நீர் வடியாமல் உள்ளது. பல இடங்கள் தனித்தனி தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சீரடையவில்லை.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 3 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள், அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|