|
| சென்னையில் விடிய விடிய மழை! |
| சென்னை (ஏஜென்சி), 22 நவம்பர் 2008 ( 09:37 IST ) | |
சென்னை நகரில் நேற்று மாலை துவங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
சென்னை நகரில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலையில் திடீரென பலத்த மழை கொட்ட தொடங்கியது. வழக்கம் போல் சிறிது நேரத்தில் ஓய்ந்துவிடாமல், பல மணி நேரமாக கனமழை கொட்டியது. விடிய விடிய கொட்டித் தீர்த்த இந்த கனமழை இன்று காலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதே நிலைமை இன்று காலையும் நீடித்தது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், தென் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|