|
| டிச.1ல் தமிழீழ அங்கீகார மாநாடு : திருமா. அறிவிப்பு! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 11:28 IST ) | |
'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெறுவதாக இருந்த தமிழீழ அங்கீகார மாநாடு, டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறும்' என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பிரிவான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை' என்னும் புதிய அமைப்பின் தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாடு ஆகியவை வரும் 26ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்த நிகழ்ச்சிகளை வரும் டிசம்பர் 1ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு இந்திய அரசின் போக்கையே மாற்றம் வகையில் மக்களைத் திரட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|