|
| நடிகர் வடிவேலுக்கு கொலை மிரட்டல் |
| தேனி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 11:16 IST ) | |
நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு செல்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் வடிவேலு மற்றும் சினிமா குழுவினர் தற்போது அங்கு முகாமிட்டுள்ளனர்.
நேற்று, வடிவேலு நாட்டாமையாகத் தோன்றும் காட்சிகள் படம் பிடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வடிவேலு வந்தார்.
அப்போது அவரது செல்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து படப்பிடிப்புக் குழுவினர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்புடன் வேறு இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.
வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|