|
| நேரடியாக இலங்கை நிவாரணம் பெறுவது நிறுத்தம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 10:49 IST ) | |
இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக தனது அலுவலகத்தில் நிதியுதவி பெறுவதை முதல்வர் கருணாநிதி நேற்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில்,'இலங்கைத் தமிழர்களுக்காக முதல்வர் அலுவலகத்தில் நேரில் நிதியுதவி பெறுவது 19 ஆம் தேதியுடன் (நேற்று) நிறுத்தப்படுகிறது' என்றன.
இலங்கைத் தமிழர்களுக்கு எவரேனும் நிதியுதவி வழங்க விரும்பினால் தலைமைச் செயலாளர் முகவரிக்கு அதை அனுப்பி வைக்கலாம் என்றும் அவை தெரிவித்தன.
எனினும் நேரில் பெற்றுக் கொள்வது நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கிய இலங்கை தமிழர் நிவாரண நிதி சேகரிக்கும் பணி மூலம் இதுவரை 24 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 939 ரூபாய் பெறபட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|