யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'போரை ‌நிறு‌த்த கருணாநிதி நெருக்கடி கொடுக்கவில்லை'!
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 16:34 IST )
"இலங்கையில் போரை நிறுத்தும்படி வ‌லியுறு‌த்‌தி, மத்திய அரசுக்கு முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி அரசியல் நெருக்கடி கொடுக்காததே, தற்போது போர் நீடிக்க காரணம்" எ‌ன்று‌ ம‌திமுக பொது‌ச் செயலாளர் வைகோ கு‌ற்ற‌ம் சாட்டியுள்ளார்.

இல‌ங்கையில் போரை உடனடியாக நிறுத்து வலியுறுத்தியும், அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு உதவுவதை கண்டித்தும் மதிமுக சார்பில் இன்று உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுச் செயலார் வைகோ பேசியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வரை வந்து, போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்துவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு மத்திய அரசே காரணம்.

த‌மிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் தீர்மானம் கொண்டுவந்த பின்னரும், 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.

மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் இலங்கையில் போர் நிறுத்தப்படும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயங்குகிறது.

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வ‌லியுறு‌த்‌தி மத்திய அரசுக்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி அரசியல் நெருக்கடி கொடுக்காததா‌ல்தா‌ன் இந்த பிரச்சனை இ‌ன்னு‌ம் நீடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகர் எம்.என். நம்பியார் மரணம்
கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெ.
இலங்கை பிரச்னை: வைகோ உண்ணாவிரதம்
தேமுதிக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: விஜயகாந்த்
தமிழக மீனவர்கள் கைது ஏன் ? : இலங்கை விளக்கம்
குரு கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு: பாமக
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...