|
| இலங்கை பிரச்னை: வைகோ உண்ணாவிரதம் |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 13:30 IST ) | |
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிடாததைக் கண்டித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் அருகே இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதப் பந்தலில் வைகோவுடன் அக்கட்சியின் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்து மதிமுக சார்பில் ஒரு வார உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று இப்போராட்டம் நடைபெருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|