|
| மதுரை கலவரத்தை விசாரிக்க ஆய்வு குழு : தங்கபாலு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 16:49 IST ) | |
மதுரை மாவட்ட கலவரங்கள் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் கலவரங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அந்த பகுதிகளில் அனைத்து பிரிவு மக்களையும் நேரில் சந்தித்து சமுதாய இன ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் ஓர் ஆய்வு அறிக்கை தயார் செய்து, தமிழக அரசிடம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானதேசிகன், சித்தன், ஆரூண், ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பாரமலை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 நாட்களுக்குள் அறிக்கை தயாரிப்பார்கள்.
தமிழகத்தின் அமைதிக்கு வழிவகுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கும் இப்பணிக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் காங்கிரஸ் தங்களது கருத்துக்களை தெரிவித்து உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|