|
| வேலூரில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் |
| வேலூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 14:57 IST ) | |
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்கல்களைக் கண்டித்து வேலூரில் இலங்கை அகதிகள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் ஏதுமறியாத அப்பாவித் தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்படுகிறார்கள்.
ராணுவத்தின் இத்தகையத் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும், தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் வேலூர் மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம், வாலாஜா, மின்னூர், பானவரம், அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அகதிகள் முகாம்களில், இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெரியர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற, இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|