|
| சென்னை பரங்கிமலையில் ஏசுநாதர் சிலை உடைப்பு! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 13:43 IST ) | |
சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் இருக்கும் புனித தோமையார் ஆலயத்தில் உள்ள ஏசுநாதர் சிலையை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
ஆலயத்தின் அருகே ஏசுநாதர் கைகளை விரித்துக் கொண்டு நிற்பது போன்ற சிலை உள்ளது. இந்த சிலையின் கை மற்றும் மார்பு பகுதியை மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் உடைத்துள்ளனர்.
ஏசுநாதர் சிலை உடைக்கப்பட்டதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆலயத்தின் முன்பு கூடினர். சிலை உடைக்கப்பட்டதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆலய நிர்வாகிகள் சிலை உடைக்கப்பட்டது பற்றி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
புறநகர் காவல்துறை ஆணையர் எஸ்.ஆர். ஜாங்கிட் உத்தரவின் பேரில் பரங்கிமலை காவல்துறையினர், சிலை உடைக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
சிலையை உடைத்தவர்களை கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலை உடைப்பைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஆலயத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|