|
| டி.வி. நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 13:23 IST ) | |
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் விடுதலை, பொதுச் செயலாளர் எஸ்.என்.வசந்த் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை :
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.
அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இத்துடன் சின்னத்திரையில் பணிபுரியும் கலைஞர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் அறிவித்துள்ள 'இலங்கைத் தமிழர் நிவாரண நிதி' பெயரில் காசோலையாக வழங்க வேண்டும்.
சின்னத்திரை நடிகர் சங்கம், எழுத்தாளர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் எஸ்.திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கிவைக்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|