|
| திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 11:31 IST ) | |
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் இன்று மாலை சூரசம்ஹார விழா விமர்சையாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள முருகன் திருக்கோவில்களில் கடந்த 29 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குழுமியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை 1.30 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாராதனைக்குப்பின், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை, மருதமலை, சென்னை வட பழனி, வடசென்னிமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் திருக்கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|