யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வைகோ,சீமானை விடுதலை செய்ய வேண்டும் : ராமதாஸ்
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2008   ( 12:58 IST )
இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இலங்கைத் தமிழர்களுக்காக உணர்ச்சிப்பூர்வமாக குரல் கொடுப்பது, இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்றவை நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்பதுடன் அது பிரிவினையையும் தூண்டாது.

எனவே வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோரை கைது செய்ததை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், ராமேஸ்வரத்தில் நடந்த பேரணியில் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும், ஒருபோதும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.

இதேபோல் இலங்கையில் என்ன நடக்கிறது என்ற தலைப்பிலான கூட்டத்தில்தான் வைகோவும், கண்ணப்பனும் பேசினர். எனவே அவர்களையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதியை கைது செய்ய ஜெ.வலியுறுத்தல்
திருப்பூ‌ர் மாவட்டம்: அரசாணை வெளியிட்டது அரசு
'வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் ஜெ.தான்'
30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி
அமீர் கைதை கண்டித்து உதவி இயக்குனர்கள் போராட்டம்
அமீர் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...