|
| புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008 ( 11:20 IST ) | |
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதியதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வெள்ளிக் கிழமை நிலவரப்படி வங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதியில் ஆந்திரக் கரையோரம் புதியதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றார்.
இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, ரமணன் கூறினார்.
சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என்று அவர் மேலும் சொன்னார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|