|
| நாமக்கல்லில் தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தை பலி! |
| நாமக்கல் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 18:50 IST ) | |
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த ராஜு- அமுதா தம்பதியினரின் ரசிகா என்ற 10 மாத பெண் குழந்தைக்கு, திருச்செங்கோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசி குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாததால், தடுப்பூசி போடப்பட்ட நாள் முதலே காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து குழந்தையை திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்த பெண் குழந்தை நேற்றிரவு பரிதாகமாக உயிரிழந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|