|
| வருமான உச்ச வரம்பு உயர்வு: வீரமணி பாராட்டு! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 4 அக்டோபர் 2008 ( 15:38 IST ) | |
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் என்ற பொருளாதார தடையை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது.
இந்த உச்ச வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்தலாம் என்று பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் செய்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங், முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|