|
| 20% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்: முதல்வர் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 4 அக்டோபர் 2008 ( 14:17 IST ) | |
விவசாயிகளிடமிருந்து 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த 2008-2009ம் ஆண்டுக்கான குறுவை கொள்முதல் பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
குறுவை கொள்முதல் செய்யப்படும் காலம், மழை காலமாக இருப்பதால் நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே 20 சதவீதம் வரை ஈரப்பதமாக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று காவிரி நீர்பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை பரிசீலித்த முதல்வர் கருணாநிதி, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|