|
| ஈழத் தமிழர் பிரச்சனையை கொச்சைப்படுத்தவில்லை: முதல்வர் |
| சென்னை (ஏஜென்சி), 3 அக்டோபர் 2008 ( 15:54 IST ) | |
இலங்கை தமிழர் பிரச்சனையைக் கொச்சைப்படுத்தியது, பண்ருட்டி ராமச்சந்திரனே என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில், 'இலங்கைத் தமிழர் பிரச்சனையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா,' என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப்பேசியிருக்கிறாரே?
பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஐ.நா. மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டிதான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?
"நாங்கள் அகதிகள் விஷயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது, இலங்கையின் உள் விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பதுதான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை."
இப்படி பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|